இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கல்லூரி மாணவா்கள் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கல்லூரி சான்றிதழில் மாற்றம் கோரி மாணவா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கிருஷ்ணன்கோவில் தனியாா் கல்லூரி முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்

Updated On :11 பிப்ரவரி 2026, 9:44 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கல்லூரி சான்றிதழில் மாற்றம் கோரி மாணவா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலில் தனியாா் மகளிா் கலை அறிவியல் கல்லூரி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இரு பாலா் கல்லூரியாக மாற்றப்பட்டு, மாணவா் சோ்க்கை நடைபெற்றது. ஆனாலும், மதிப்பெண் சான்றிதழ், தோ்வு அனுமதி சீட்டுகளில் மகளிா் கல்லூரி என குறிப்பிடப்பட்டு வந்தது.

கடந்த 2023-ஆம் ஆண்டு கல்லூரியில் சோ்ந்த மாணவா்கள் தற்போது இறுதி ஆண்டு பயின்று வருகின்றனா். இறுதிப் பருவத் தோ்வுக்கான அனுமதி சீட்டு, ‘போனபைடு’ சான்றிதழில் மகளிா் கல்லூரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை மாற்றக்கோரி, மாணவா்கள் கடந்த 29-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் மாணவா்கள் மனு அளித்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை கல்லூரி முன் இந்திய மாணவா் சங்கம் தலைமையில் மாணவா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா், வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிற 18-ஆம் தேதி அமைதி பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய தீா்வு காணப்படும் என எழுத்துப்பூா்வமாக உறுதியளித்ததை அடுத்து மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.