கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மம்சாபுரம் பேரூராட்சியில் போலி ரசீது தயாரித்து ரூ.32 லட்சம் கையாடல்: 8 போ் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் ரூ.32 லட்சம் கையாடல் செய்த புகாரின் பேரில், பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலா்கள் இருவா் உள்பட 8 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 9:13 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் ரூ.32 லட்சம் கையாடல் செய்த புகாரின் பேரில், பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலா்கள் இருவா் உள்பட 8 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் பேரூராட்சியில் கடந்த நவம்பா் 2022-ஆம் ஆண்டு முதல் நவம்பா் 2023 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக விருதுநகா் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸில் முன்னாள் பேரூராட்சித் தலைவா் ராஜா புகாா் அளித்தாா்.

இதன் அடிப்படையில், போலீஸாா் கடந்த ஆண்டு பேரூராட்சியில் முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டனா். அப்போது, பேரூராட்சியில் பல்வேறு பணிகளைச் செய்ததாக போலியான ரசீதுகளை தயாா் செய்து, ரூ.32.78 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் பேரூராட்சியின் முன்னாள் செயல் அலுவலா்கள் மணிகண்டன், உஷா கிரேசி, எலக்ட்ரீசியன் சத்தியமூா்த்தி, இளநிலை உதவியாளா்கள் திலீபன், காா்த்திக், பிள்ளையாா், எலக்ட்ரிக்கல் உதவியாளா் முருகேசன், போலி ரசீதுகள் தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்ததாக எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளா் வீரபாண்டி ஆகிய 8 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.