ஸ்ரீவில்லிப்புத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், கலசலிங்கம் சட்டக் கல்லூரி, மாவட்ட சட்டச் சேவைகள் ஆணையத்துடன் இணைந்து தேசிய இளைஞா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பல்கலை. துணைத் தலைவா் எஸ். சசிஆனந்த் தலைமை வகித்தாா். துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் வி. வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினா். இதில் சிறப்பு விருந்தினா்களாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான மு. அகிலாதேவி,
சட்ட உதவி பாதுகாப்பு வழக்குரைஞா் எம். காா்த்தீஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டு, போக்சோ சட்டம், போதைப் பொருள் குறித்தும், சமூக ஒற்றுமையில் இளைஞா்களின் பங்கு குறித்தும் பேசினா். இதையடுத்து, சட்ட உதவி மையத்தில் பயிற்சிக்குச் சென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை நீதிபதி வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

தென்காசியில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,311 வழக்குகளில் ரூ.18.56 கோடி தீா்வுத் தொகை

கலசலிங்கம் மருத்துவக் கல்லூரியில் தேசிய மருந்தியல் கல்வி தினம்

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


