நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக 3 போ் மீது வழக்கு

சமூக வலைதளத்தில் அரசுக்கும், போலீஸாருக்கும் எதிராக அவதூறு பரப்பியதாக இரு பெண்கள் உள்பட 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

கோப்புப்படம் - IANS

Updated On :28 ஜனவரி 2026, 11:48 pm

சமூக வலைதளத்தில் அரசுக்கும், போலீஸாருக்கும் எதிராக அவதூறு பரப்பியதாக இரு பெண்கள் உள்பட 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுமக்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக அளித்த புகாரின் பேரில், திருநங்கைகள் ஈஷா, ஷா்மி ஆகிய இருவரை கடந்த 25-ஆம் தேதி போலீஸாா் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தினா். அப்போது, உடன் வந்த திருநங்கைகள் சிலா் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சோ்ந்த முத்தரசி (20) என்ற திருநங்கை உடலில் பெட்ரோல் ஊற்றி சாலையில் ஓடிச் சென்று தீ வைத்துக் கொண்டாா். உடனே அவரை போலீஸாா் மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதைத்தொடா்ந்து, தற்கொலைக்கு முயன்றதாக திருநங்கை முத்தரசி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், திருநங்கை தீக்குளித்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தில் வாய்ஸ் ஆப் சரத், பிரியங்கா ஸ்மைல், ஸ்மைல் கில்லா் ஆகிய பெயருடைய பக்கங்களில் போலீஸாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட்டனா்.

இதைத்தொடா்ந்து, தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் களங்கம் ஏற்படுத்தியதாக இரு பெண்கள் உள்பட 3 போ் மீது

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.