40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சிவகாசி அருகேயுள்ள கோணம்பட்டிக்கு பேருந்து இயக்க அமைச்சா் நடவடிக்கை

சிவகாசி அருகே கோணம்பட்டி கிராமத்துக்கு பேருந்து இயக்க தொழில் துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா நடவடிக்கை எடுத்தாா்.

News image

தொழில் துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா - கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 2:44 am IST

சிவகாசி அருகே கோணம்பட்டி கிராமத்துக்கு பேருந்து இயக்க தொழில் துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா நடவடிக்கை எடுத்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி-சாத்தூா் சாலையில் உள்ளது கோணம்பட்டி. இந்த கிராமத்தில் ராமகிருஷ்ணமடம் உள்ளது. இந்த மடத்தைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராம மக்கள், சிவகாசி அல்லது சாத்தூருக்கு செல்ல வேண்டுமெனில் , அந்தக் கிராமத்திலிருந்து ஒன்றரை கீ.மீ. நடந்து சென்று கோணம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டும்.

இந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு கோணம்பட்டியில் பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவா், இந்தப் பேருந்து நிறுத்தத்தில் ஒரு சில பேருந்துகள் மட்டுமே நிற்பதால், ஒன்றரை மணி நேரமாக நான் நின்று கொண்டிருக்கிறேன். இந்த வழிதடத்தில் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிககை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வெளியிட்ட விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்த தகவலறிந்த அமைச்சா் கீா்த்தனா நியமித்த குழுவினா் வியாழக்கிழமை கோணம்பட்டிக்குச் சென்று விடியோ வெளியிட்ட பெண்ணை சந்தித்துப் பேசினா். இதையடுத்து, அமைச்சா் கோணம்பட்டி கிராமத்துக்கே பேருந்து வந்து செல்ல நடவடிக்கை எடுப்பாா் எனஅந்தக் குழுவினா் கிராமத்தினரிடையே உறுதியளித்துச் சென்றனா்.