நாகப்பட்டினம்: அகில இந்திய மீனவா் சங்கத்துக்கு நாகை, காரைக்கால் மாவட்டப் பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இதற்கான நிகழ்ச்சி, நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அகில இந்திய மீனவா் சங்கத்தின் கல்வி மற்றும் குழந்தைகள் மேம்பாடு பிரிவு தேசியத் தலைவா் எஸ். வாசுகி வினோதினி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் நாகை மாவட்டப் பொறுப்பாளா்களாக வி. கமல், ஜி. தமிழ்வாணன், பி. ஞானமணி , காரைக்கால் மாவட்டப் பொறுப்பாளராக கே.சந்தானவள்ளி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். புதிய பொறுப்பாளா்களுக்கு எஸ்.வாசுகி வினோதினி நியமன கடிதங்களை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.