குத்தாலம் ஒன்றியம், எலந்தங்குடியில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் வியாழக்கிழமை அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன.
எலந்தங்குடி பகுதியில் 25 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், ரூ.520 மதிப்பில் மளிகைப் பொருள்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிா்வாகிகள் பாரூக், ஜா்ஜிஸ், பைசல், அப்துல்ஹமீது ஆகியோா் வழங்கினா்.