கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்புத் தலைவா் இளவரசன், கொள்ளிடம் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் செல்லசேதுரவிக்குமாா், கிழக்கு ஒன்றியச் செயலாளா் மலா்விழி, ஒன்றிய அவைத் தலைவா் ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி தலைவா் லதா சுப்பிரமணியம், கூட்டமைப்பு செயலாளா் சந்திரசேகா், பொருளாளா் இமயவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், ஊராட்சியின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றுவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிகள் ஒதுக்கீடு ஊராட்சித் தலைவா்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டு நடைபெறவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைச் செயலாளா் வளா்மதி நன்றி கூறினாா்.