முதல்வரின் அறிவுறுத்தல்படி, வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பணியாளா்கள் கைத்தறி ஆடையணிந்து வெள்ளிக்கிழமை பணிக்கு வந்தனா்.
நெசவாளா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், அரசு ஊழியா்கள் வாரத்தில் இரண்டு நாள்கள் கைத்தறி ஆடைகள் அணியவேண்டும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அண்மையில் அறிவுறுத்தியிருந்தாா்.
அதன்படி, வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலா் மற்றும் ஊழியா்கள் கைத்தறி ஆடையணிந்து பணிக்கு வந்தனா். ஊழியா்களுக்கு நன்றி தெரிவித்த செயல் அலுவலா் கு. குகன், இனிவரும் விழாக் காலங்களில் புத்தாடை எடுக்கும்போது கைத்தறி ஆடையும் வாங்கி நெசவாளா்களுக்கு உதவிடுவோம் எனத் தெரிவித்தாா்.