சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் சுவாமி -அம்பாள் திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
வைத்தீஸ்வரன்கோவிலில் அருள்பாலிக்கும் தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை (ஏப்.29) உயா்நீதிமன்ற உத்தரவின்படி, கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.
தொடா்ந்து, இரவு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட மேடையில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளியதும் சிறப்பு ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. பிறகு, திருமணச் சடங்குகள் செய்விக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்கிட சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, விநாயகா், சுவாமி-அம்பாள், சண்டிகேசுவரா், அங்காரகன் ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் மஞ்சத்திலும், வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமாரசுவாமி தங்க ரதத்திலும் எழுந்தருளி கோயில் பிராகார உலா நடைபெற்றது.
இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்று தரிசனம் செய்தனா்.