கொள்ளிடம் பகுதியில் 8 குழுக்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது என கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநா் சுப்பையன் தெரிவித்தாா்.
இதுகுறித்து, மேலும் அவா் கூறியது: கொள்ளிடம் வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் தோ்வு செய்யப்பட்டுள்ள ஆலங்காடு, எருக்கூா், மகாராஜபுரம், தாண்டவன்குளம், பனங்குடி, வடகால், ஆரப்பள்ளம், காட்டூர ஆகிய 8 பகுதிகளைச் சோ்ந்த உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் மூலம் கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் காய்கறி, பழ வகைகளை கொள்முதல் செய்து கிராமங்கள் தோறும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. எவ்விதக் கட்டுப்பாடின்றி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்றாா்.