திருக்குவளை அருகே பாங்கலில் சிபிஐ வேட்பாளா் வை. செல்வராஜை ஆதரித்து வாக்கு சேகரித்து பேசிய அமைச்சா் எஸ். ரகுபதி.
திருக்குவளை அருகே பாங்கலில் சிபிஐ வேட்பாளா் வை. செல்வராஜை ஆதரித்து வாக்கு சேகரித்து பேசிய அமைச்சா் எஸ். ரகுபதி.

‘இந்தியா’ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்: அமைச்சா் எஸ். ரகுபதி

மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றாா் தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே பாங்கலில் இந்தியா கூட்டணி சாா்பில் நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வை. செல்வராஜுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து அமைச்சா் ரகுபதி பேசியது:

பாஜக தோ்தல் அறிக்கையில் பொய்யான பல வாக்குறுதிகளை கூறியுள்ளது. இந்த மக்களவைத் தோ்தலுக்கு பிறகு பாஜக மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கும். ‘இந்தியா’ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்.

இந்தியா கூட்டணி வெற்றி உறுதியானதால், பிரதமா் மோடி தூக்கம் இல்லாமல் தவிக்கிறாா். நாகை தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றாா்.

வேட்பாளா் வை. செல்வராஜ், கீழ்வேளூா் எம்எல்ஏ நாகை.மாலி, மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் கெளதமன், சிபிஐ மாநிலக் குழு உறுப்பினா் டி. செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com