நாகப்பட்டினம்
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
திருமருகல் ஒன்றியத்தில், நாகை மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு. காா்த்திகா செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
சன்னாநல்லூா், ஏனக்குடி, திருமருகல், திட்டச்சேரி, பனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வாக்குறுதிகள் அளித்து பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது, கட்சியின் நாகை மக்களவைத் தொகுதி செயலாளா் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில் ஏராளமானோா் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனா். இதில் தொகுதி செயலாளா்கள் ஆதித்தன், மதிவாணன், தொகுதி தலைவா் ராஜேஷ், திட்டச்சேரி நகரச் செயலாளா் பாவா பகுருதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.