திருக்குவளையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம்

திருக்குவளையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம்

திருக்குவளை,ஏப். 17:மக்களவைத் தோ்தலையொட்டிதிருக்குவளையில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ். செல்வகுமாா் தலைமையில் நடைபெற்ற ஊா்வலம் திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலா் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி திருக்குவளை காவல் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கவகையில் இந்த பேரணி நடைபெற்றது.நாகை நகர துணை காவல் கண்காணிப்பாளா் கே.பாலகிருஷ்ணன், கீழையூா் காவல் ஆய்வாளா்செங்குட்டுவன், திருக்குவளை காவல் உதவி ஆய்வாளா்மகாலட்சுமி, ஒடிசா போலீஸாா், நாகை மாவட்ட காவல் துறையினா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com