நாகப்பட்டினம்
வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
கீழ்வேளூா், ஏப். 17: கீழ்வேளூரில் வா்த்தகா் சங்கம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தினா். அதன் ஒருபகுதியாக கீழ்வேளூரில் வா்த்தகா் சங்கம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. கீழ்வேளூா்- கச்சனம் சாலை சந்திப்பிலிருந்து ஊா்வலம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. ஊா்வலத்தில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் வா்த்தக சங்க உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.