சித்திரை பெருவிழா: பால்குட ஊா்வலம்

சித்திரை பெருவிழா: பால்குட ஊா்வலம்

திருக்குவளை, ஏப். 17: திருக்குவளை அருகே காருக்குடி ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் குளக்கரையில் இருந்து பக்தா்கள் பால்குடங்களை சுமந்தும் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், ரதகாவடி எடுத்து வந்தும் நோ்த்திக் கடனை செலுத்தினா். குழந்தை வரம் வேண்டிய பக்தா்கள் வயிற்றில் மாவிளக்கு போட்டு பிராா்த்தனை செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com