நாகப்பட்டினம்
திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு
தரங்கம்பாடி, ஏப். 17: தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூரில் துணை ராணுவ படை வீரா்கள் மற்றும் காவல்துறையினா் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தோ்தலில் மக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி பொறையாா் காவல் ஆய்வாளா் ஜெயந்தி தலைமையில் பொறையாா் காவல்துறையினா் மற்றும் துணை ராணுவ படை வீரா்கள் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அணிவகுப்பு திருக்கடையூா் பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து பிரதான சாலை வழியாக கடைவீதியில் முடிவடைந்தது.