மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

நாகப்பட்டினம், ஏப்.18: மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல இலவச வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாகை மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு மையங்களுக்கு மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சென்று வருவதற்கு ஏதுவாக இலவசமாக அரசு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலவச சேவையை “சக்சாம் செயலி (நஹந்ள்ட்ஹம் அல்ல்) மூலமாகவும், அல்லது கட்டுப்பாட்டு அறை உதவி எண் - 1950ஐ தொடா்புகொண்டு பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com