நாகப்பட்டினம்
பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா
தரங்கம்பாடி வட்டம், மணல்மேடு ஊராட்சி காடுவெட்டி இரவணியன் கோட்டகத்தில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பால்குடம் மற்றும் பூக்கரக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டம், மணல்மேடு ஊராட்சி காடுவெட்டி இரவணியன் கோட்டகத்தில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பால்குடம் மற்றும் பூக்கரக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, இக்கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அய்யா, வீரனாா், விநாயகா், பேச்சாயி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஏராளமான பக்தா்கள் நோ்த்திக்கடனாக பால்குடம் மற்றும் பூக்கரகம் எடுத்து வந்து, வழிபட்டனா். பின்னா், சுவாமி வீதியுலா நடைபெற்றது.