காரைக்காலில் பொதுமக்கள் குறைதீர் முகாம் திங்கள்கிழமை (ஆக. 21) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், பொதுமக்கள் குறைதீர் முகாம் மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாவது திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறுகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தின் 2-ஆவது மக்கள் குறை தீர் கூட்டம் திங்கள்கிழமை காலை 10 முதல் 11.30 மணி வரை ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அரசுத் துறை அலுவலக தலைமை அதிகாரிகள் கலந்துகொண்டு, பொதுமக்கள் குறைகளுக்கு நேரடியாக பதில் அளிப்பார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.