காரைக்கால் அங்கன்வாடி ஊழியர் சங்க புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
காரைப் பிரதேச அங்கன்வாடி ஊழியர் சங்கப் பொதுக்குழு கூட்டம் அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில், அரசு ஊழியர் சம்மேளன கெளரவத் தலைவர் ஜார்ஜ், தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. சம்மேளன கெளரவத் தலைவர் ஜெய்சிங், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், புதுச்சேரி சம்மேளன பொறுப்பாளர்கள் ஆனந்தராஜ், திலகம், தமிழரசி ஆகியோர் முன்னிலையில் காரைக்கால் அங்கன்வாடி ஊழியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சங்கத் தலைவராக தேன்மொழி, கெளரவத் தலைவர்களாக விக்டோரியா, உஷா, செயலராக வாணி, பொருளாளராக பாகிரிதி, துணைத் தலைவர்களாக வசந்தி, மல்லிகை, சிவபாக்கியம், சித்ரா, வளர்மதி, துணை செயலர்களாக ஜெயந்தி, இசபெல்லா, ஹெலென்மேரி, சாந்தி, முத்துலட்சுமி, துணைப் பொருளாளராக ஜெயசீலி, அமைப்பு செயலராக வசந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.