காரைக்காலில் பல்வேறு அரசு அலுவலகங்களில் ஒருங்கிணைந்து தூய்மைப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
அரசு அலுவலகங்களிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்தந்த துறையின் தலைமை அதிகாரிகள் முன்னிலையில், ஊழியர்கள் அனைவரும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அரசு அலுவலகத்தினர் தரப்பில் கூறும்போது, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சனிக்கிழமை அவரவர் அலுவலகத்தில் ஊழியர்கள் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இந்தப் பணிகள் வரும் வாரங்களிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இந்தப் பணியில் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை பங்கேற்றதாகத் தெரிவித்தனர்.