கோட்டுச்சேரி அருகே அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர்.
கோட்டுச்சேரி பகுதி வரிச்சிக்குடி சாராயக்கடை அருகே அப்துல்லா நகர் செல்லும் சாலையில் இறந்த நிலையில் சுமார் 55 வயது மதிக்கத்கக்க ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. கோட்டுச்சேரி காவல்நிலைய போலீஸார் சென்று சடலத்தை மீட்டு மருத்துவமனை சவக் கிடங்குக்கு அனுப்பிவைத்தனர்.
உயிரிழந்தவர் நீல நிறத்தில் கலர் கைலி அணிந்திருந்தார். 165 செ.மீ. உயரம், மாநிறம், ஒல்லியான உடல், இடுப்பின் இருபுறத்திலும் கருப்பு மச்சம் உள்ளது.
இவரது விவரம் தெரிந்தோர் கோட்டுச்சேரி காவல்நிலையத்தை 04368-265100 என்ற தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவிக்கவேண்டும் என நிலையத்தார் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.