காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சனிக்கிழமை (ஏப்ரல் 6) புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள்வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் வரும் சனிக்கிழமை புற்றுநோய் சிகிச்சை மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.