காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் டிசம்பா் 7-ஆம் தேதி ஜிப்மா் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் அரசு பொதுமருத்துவமனை உள்வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் டிசம்பா் 7-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் ஜிப்மா் மருத்துவமனையின் சிறுநீரகம் மற்றும் சிறுநீரக அறுவைச் சிகிச்சை மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனா். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.