பாலிடெக்னிக் கல்லூரியில் சேர நாளை கடைசி நாள்

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்வதற்கான தேதியை கல்லூரி நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்வதற்கான தேதியை கல்லூரி நிர்வாகம்  தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அரசு கல்வி நிறுவனமான காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடியில் செயல்பட்டுவரும் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 2-ஆம் ஆண்டு சேர்வதற்கு பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ. முடித்து ஆன்லைனில் விண்ணப்பித்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், கல்லூரியில் சேர்வதற்கான கடைசி நாள் 20.6.2019. மேலும் விவரங்களுக்கு 04368-265521 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவேண்டும் என கல்லூரி முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com