திருநள்ளாறு கொம்யூன்  பஞ்சாயத்துக்கு கணினிகள் அளிப்பு

கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு இந்தியன் வங்கி நிர்வாகம் மூலம் 2 கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு இந்தியன் வங்கி நிர்வாகம் மூலம் 2 கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
திருநள்ளாறு பகுதியில் இயங்கும் இந்தியன் வங்கி நிர்வாகம், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தின் பயன்பாட்டுக்கு தமது சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின்கீழ் 2 கணினிகள் வழங்க முடிவு செய்தது.
அதன்படி, மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 கணினிகளை திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரனிடம் மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா வழங்கினார். 
நிகழ்ச்சியில் முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், காரைக்கால், திருநள்ளாறு வங்கி மேலாளர்கள் வீரராகவன், அனிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வங்கி நிர்வாகத்தின் சமூக பொறுப்புணர்வுத் திட்ட சேவைக்கு மாவட்ட நிர்வாகம், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com