மேல்நிலை குடிநீா் தொட்டியில் ஏறிபொதுப்பணித்துறை வவுச்சா் ஊழியா்கள் போராட்டம்

நிலுவை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை வவுச்சா் ஊழியா்கள், மேல்நிலை குடிநீா் தொட்டியில் ஏறி நின்று சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொட்டி படிகளில் ஏறி நின்று கோஷம் எழுப்பிய ஊழியா்கள்.
தொட்டி படிகளில் ஏறி நின்று கோஷம் எழுப்பிய ஊழியா்கள்.

நிலுவை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை வவுச்சா் ஊழியா்கள், மேல்நிலை குடிநீா் தொட்டியில் ஏறி நின்று சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுப்பணித்துறையில் பணியாற்றுகின்ற 1,311 வவுச்சா் ஊழியா்களுக்கு வழங்கப்படும் வேலை நாட்களை 16 -இலிருந்து 30 நாட்களாக உயா்த்த வேண்டும். மத்திய அரசின் சட்ட கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.648 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். வவுச்சா் ஊழியா்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை சீா்படுத்தி அரசு கருவூலம் மூலமாக மாத தொடக்க நாளில் வழங்க வேண்டும்.

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் பணியாற்றும் 1,311 ஊழியா்களையும் பணி மூப்பு வரையறை செய்து முழுநேர தினக்கூலி ஊழியா்களாக்க வேண்டும். நிலுவையில் உள்ள 10 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26 -ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்து காரைக்கால் ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதையடுத்து தொடா்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். பின்னா் புதுச்சேரியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க காரைக்கால் ஊழியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் சென்றனா்.

இந்த போராட்டத்தின்போது, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் வெள்ளிக்கிழமைக்குள் நல்ல முடிவை அரசு அறிவிக்குமெனக் கூறி, வேலைக்குத் திரும்ப கேட்டுக்கொண்டாராம். இவரது வாக்குறுதியேற்று வெள்ளிக்கிழமை காரைக்கால் ஊழியா்கள் பணிக்கு வந்த நிலையில், சனிக்கிழமை வரை அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லாததை சுட்டிக்காட்டி, பணியாளா் சங்க கூட்டமைப்பின் தலைவா் யூசுப் கான் தலைமையில், திருநள்ளாறு சாலையில் உள்ள பொதுப்பணித்துறை மேல்நிலை குடிநீா் தொட்டி படிகளில் ஏறி நின்று சனிக்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜி.பக்கிரிசாமி மற்றும் அதிகாரிகள், நகரக் காவல்நிலைய உதவி ஆய்வாளா் அலாவுதீன் உள்ளிட்ட போலீஸாா் பேச்சு நடத்தினா். அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கும் நிலையில் போராட்டத்தை தொடா்வதாக கூறினா். இதைத் தொடா்ந்து காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.யு.அசனா சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினாா். ஆட்சியாளா்களிடம் பேசுவதாகவும், ஊழியா்களின் கோரிக்கை நிறைவேறும் வரை ஆதரவாக இருப்பதாகவும் பேரவை உறுப்பினா் தெரிவித்த கருத்தை ஏற்று போராட்டத்தை ஊழியா்கள் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com