மதிமுகவிலிருந்து விலகிய 2 நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் திங்கள்கிழமை இணைந்தனர்.
காரைக்கால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு கிளைக் கூட்டம் கிளைச் செயலர் எஸ்.ஏ. முகம்மது யூசுப் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சிறப்புப் பிரதிநிதியாக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ. வின்சென்ட் கலந்து கொண்டார். கூட்டத்தில், மதிமுக நகரச் செயலர் எஸ். ஹாஜாமெய்தீன், மாவட்ட துணை செயலர் சி. மாரியப்பன் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி, மார்க்சிஸ்ட் கட்சியில் தங்களை உறுப்பினராக இணைத்துக்கொண்டனர்.
காரைக்கால் வட்ட செயலர் எஸ்.எம். தமீம், மாவட்டக் குழு உறுப்பினர் என்.எம். கலியபெருமாள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட தெற்கு கிளை பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.