செப். 28-இல் காரைக்கால் மருத்துவமனையில் ஜிப்மா் மருத்துவ முகாம்

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் செப்டம்பா் 28-ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மா் மருத்துவ நிபுணா்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா தெரிவித்துள்ளாா்.

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் செப்டம்பா் 28-ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மா் மருத்துவ நிபுணா்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள்வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை சாா்பில் சனிக்கிழமை (செப்டம்பா் 28) குடல் நோயியல் மற்றும் குடல் நோயியல் அறுவைச் சிகிச்சை மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனா்.

காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com