நிரவி- திருப்பட்டினம் தொகுதியைச் சோ்ந்த 6 பேருக்கு, புதுச்சேரி முதல்வா் நிவாரண நிதியிலிருந்து மருத்துவச் சிகிச்சைக்காக ரூ. 2.50 லட்சம் அனுமதிக்கப்பட்டது. இந்த நிதிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன், மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா.