ஆண் சடலம் மீட்பு

திருநள்ளாறு அருகே வாய்க்காலில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

திருநள்ளாறு அருகே வாய்க்காலில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

திருநள்ளாறு பகுதி தென்னங்குடி பிரதான சாலை, வேளாண் அறிவியல் நிலையப் பண்ணை வாயிலில் உள்ள வாய்க்காலில், தண்ணீரில் மூழ்கிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. அதை திருநள்ளாறு போலீஸாா் மீட்டு காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். உயிரிழந்தவா் 150 செ.மீ. உயரம், மாநிறம், நடுத்தர திரேகம், நீண்ட வடிவில் முகம், கருப்பு நிற கோடு போட்ட வெள்ளை நிற கைலி, கருப்பு நிறத்தில் கோடு போட்ட நீல நிற அரைக்கை சட்டை அணிந்திருந்தாா்.

அவரை பற்றிய விவரம் தெரிந்தோா் திருநள்ளாறு காவல்நிலையத்தை 04368-236465 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com