காரைக்காலைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் கடலில் மூழ்கி இறந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
காரைக்கால், கடற்கரைப் பகுதியில், இளைஞர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கடலில் மூழ்கி இறந்தவர், காரைக்கால் நாயக்கன்குளத்து வீதியைச் சேர்ந்த வரதராஜூ என்பவரது மகன் கோபாலசாமி (38) என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறி கடலில் மூழ்கி, உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து, காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.