காரைக்கால் அருள்மிகு கைலாசநாதர் கோயில் மற்றும் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் தேவஸ்தான ஊழியர்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்களை, சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
காரைக்கால் அருள்மிகு கைலாசநாதர் கோயில் மற்றும் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தான ஊழியர்கள், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உதவிடும் வகையில், பொங்கல் பானை, மஞ்சள் கொத்து, அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருள்களை காரைக்கால் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.ஏ.யு. அசனா மற்றும் அறங்காவலர் வாரிய நிர்வாகிகள்
வழங்கினர்.