பக்கிரிசாமி பிள்ளையின் உருவச் சிலைக்கு மாலை

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் பக்கிரிசாமி பிள்ளையின் நினைவு நாளையொட்டி, காரைக்காலில் உள்ள

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் பக்கிரிசாமி பிள்ளையின் நினைவு நாளையொட்டி, காரைக்காலில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
பிரெஞ்சு விடுதலைக்குப் பிறகு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலாவது முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர் காரைக்காலைச் சேர்ந்த பக்கிரிசாமி பிள்ளை. இவர் புதுச்சேரி யூனியன் பிரதேச பாதுகாப்பு சபையின் தலைவராகவும் பொறுப்பு வகித்ததால் இவர் முன்னாள் முதலமைச்சர் என அழைக்கப்படுகிறார்.
இவருக்கு, காரைக்கால் நகராட்சி திருமண மண்டப வளாகத்தில், முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் பக்கிரிசாமி பிள்ளையின்  63 -ஆவது நினைவு நாளையொட்டி, காரைக்கால் மாவட்ட சோழிய வேளாளர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவர் சின்னையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுச் செயலாளர் அமுதா ஆறுமுகம், பொருளாளர் கருணாநிதி, துணைச் செயலாளர் கனகசுந்தரம், துணைப் பொருளாளர் செல்வராஜ், அலுவலக நிர்வாகி காளிதாசன், ஆசிரியர் சிவசண்முக வடிவேலு உள்ளிட்டோர் பங்கேற்று உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சங்க நிர்வாகிகள் இளங்கோவன், நிரவி உலகநாதன், இளவரசன், நெடுங்காடு பத்தரவேல், வரிச்சிக்குடி ராமசாமி பிள்ளை, திருநள்ளாறு பாரதி, திருப்பட்டினம் வீரச்செல்வம், ராஜதுரை, எல்.ஐ.சி. ரமேஷ், அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com