திருப்பாவை தொடர் சொற்பொழிவு நிறைவுப் பாராட்டு விழா

திருப்பாவை தொடர் சொற்பொழிவு நிறைவையொட்டி சொற்பொழிவாளருக்குப் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது. 

திருப்பாவை தொடர் சொற்பொழிவு நிறைவையொட்டி சொற்பொழிவாளருக்குப் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது. 
காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் 38-ஆம் ஆண்டாக,  மார்கழி மாதம் (16.12.2018 முதல் 14.1.2019 வரை) திருமலை திருப்பதி தேவஸ்தான ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்ட ஆதரவில் திருப்பாவை தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. சொற்பொழிவாளருக்குப் பாராட்டு விழா,  நித்யகல்யாணப் பெருமாள் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஸ்ரீகைலாசநாதர் கோயில் அறங்காவல் குழுத் தலைவர் ஆர்.ஏ.ஆர். கேசவன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச். நாஜிம், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால் ஆகியோர் கலந்துகொண்டு, திருப்பாவை தொடர் சொற்பொழிவாற்றிய  உ.வே.கு. அரங்கநாதாச்சாரியார் சுவாமிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனர். 
பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திருப்பாவை தொடர் சொற்பொழிவாளரின் சேவையை பாராட்டிப் பேசினர். நிறைவில் உ.வே.கு. அரங்கநாதாச்சாரியார் சுவாமிகள் ஏற்புரையாற்றினார்.  
கைலாசநாதர் கோயில் அறங்காவல் குழு முன்னாள் தலைவர் கே.தண்டாயுதபாணிபத்தர், முன்னாள் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவாக பேராசிரியர் கே.பி.சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com