மரங்களில் உள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற அறிவுறுத்தல்

சாலையோர மரங்களில் ஆணி அடித்து பதிக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை உடனடியாக

சாலையோர மரங்களில் ஆணி அடித்து பதிக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசுக்குச் சொந்தமான சாலையோரத்தில் உள்ள மரங்களில், ஆணி அடித்து விளம்பரப் பதாகைகள் பதிக்கப்பட்டுள்ளன. இது, இந்திய வன சட்டம் 1927-இன்படி குற்றமாகும். எனவே,  காரைக்கால் மாவட்டத்தில், மரத்தில் விளம்பரம் செய்துள்ள நிறுவனத்தினர் தாமாக முன்வந்து அவற்றை அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com