சாலையோர மரங்களில் ஆணி அடித்து பதிக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசுக்குச் சொந்தமான சாலையோரத்தில் உள்ள மரங்களில், ஆணி அடித்து விளம்பரப் பதாகைகள் பதிக்கப்பட்டுள்ளன. இது, இந்திய வன சட்டம் 1927-இன்படி குற்றமாகும். எனவே, காரைக்கால் மாவட்டத்தில், மரத்தில் விளம்பரம் செய்துள்ள நிறுவனத்தினர் தாமாக முன்வந்து அவற்றை அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.