விவிபாட் இயந்திர பரிசோதனை: அனைத்துக் கட்சியினருக்கு அழைப்பு

காரைக்காலில் விவிபாட் இயந்திர முதற்கட்ட பரிசோதனை திங்கள்கிழமை (மார்ச் 18) நடைபெறவுள்ளதால்,

காரைக்காலில் விவிபாட் இயந்திர முதற்கட்ட பரிசோதனை திங்கள்கிழமை (மார்ச் 18) நடைபெறவுள்ளதால், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரி ஏ. விக்ரந்த் ராஜா அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம் : நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, புதுச்சேரி தேர்தல் துறையிடமிருந்து வந்துள்ள யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் 12 விவிபாட் சாதனம் முதற்கட்டமாக சோதனை செய்யும் பணி திங்கள்கிழமை (மார்ச் 18) காலை 10 மணியளவில் காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com