காரைக்கால் அரசு மருத்துவமனை மைதானத்தில் தீ விபத்து

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனை கண் மருத்துவப் பிரிவு அருகே குப்பைகள், கருவேல மரங்கள் வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்தன.

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனை கண் மருத்துவப் பிரிவு அருகே குப்பைகள், கருவேல மரங்கள் வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்தன.
காரைக்கால் அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் ரயில் நிலையம் செல்லும் வழியில் கண் மருத்துவப் பிரிவு உள்ளது. இந்த பிரிவு அருகே திறந்தவெளி மைதானம் உள்ளது. இதில் மருத்துவமனை நிர்வாகத்தில் பயனற்றுப் போன வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் கருவேல மரங்களும் மண்டியுள்ளன.
இந்த மைதானத்தின் ஒருபுறத்தில் வியாழக்கிழமை பகல் 12.30 மணியளவில் தீப்பிடித்து, கருவேல மரங்கள் மற்றும் காய்ந்த தழைகள், குப்பைகளில் பரவியது.  
இதுகுறித்து, தகவலறிந்த காரைக்கால் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்துவந்து, தீயை கட்டுப்படுத்தினர். மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பி.சித்ரா, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பி. உதயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். கண் மருத்துவப் பிரிவுக்கு வந்தோர் யாரேனும் 
குப்பையில் தீவைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 
காரைக்கால் நகரக் காவல்நிலைய ஆய்வாளர் ஏழுமலை மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து, மருத்துவ அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். 
கருவேல மரங்களால் ஆபத்து : ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வரும்போதெல்லாம் கருவேல மரங்களும், குப்பைகளும் தீப்பிடிப்பது தொடர்கிறது. எனவே, பொது இடங்களில்  உள்ள கருவேல மரங்களை அகற்ற அரசு நிர்வாகமும், தனியார் குடிமனைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நிலத்தின் உரிமையாளர்களும் நடவடிக்கை எடுத்தால், இதுபோன்ற தீ விபத்துகளை கட்டுக்குள் கொண்டுவருவதுடன், கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்பும் குறையும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com