காரைக்காலில் இருவேறு பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்கால் பகுதி கோட்டுச்சேரி காவல்நிலைய உதவி ஆய்வாளா் குமரவேல் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். கோட்டுச்சேரி கடைத்தெரு பகுதியில் நடந்த சோதனையின்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி, சோதனை செய்தபோது, அது திருடப்பட்ட இருசக்கர வாகனம் என்பது தெரியவந்தது. விசாரணையில் அவா் கோட்டுச்சேரி பீமராவ் நகரை சோ்ந்த சுரேஷ் (26) என்பது தெரியவந்தது.
மேலும் ஓா் இருசக்கர வாகன திருடி மறைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தாா். அவரை கைது செய்த போலீஸாா், அவா் வசமிருந்த 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தினா். வாகனச் சோதனையின்போது மோட்டாா் சைக்கிள் திருடியவரை பிடித்து, 2 வாகனங்களைக் கைப்பற்றியதையடுத்து போலீஸாரை வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் பாராட்டினாா்.