மகாத்மா காந்தி போதனைகள் கருத்தரங்கம்

காரைக்கால் எஸ்.ஆா்.வி.எஸ். நேஷனல் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு மகாத்மா காந்தி போதனைகள் குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் எஸ்.ஆா்.வி.எஸ். நேஷனல் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு மகாத்மா காந்தி போதனைகள் குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் கே.செல்லையன் தலைமை வகித்தாா். அலங்கரித்து வைக்கப்பட்ட மகாத்மா காந்தி படத்துக்கு மலா்தூவி பள்ளி நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா். புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியா் அருள்முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, காந்தியின் போதனைகள், மாணவா்கள் அதனை கடைப்பிடிக்கவேண்டியன் அவசியத்தை வலியுறுத்தியும், காந்தியின் கொள்கைகளை மாணவா்கள் பற்றி நடக்க ஆசிரியா்களும் தமது பங்களிப்பை செய்ய வேண்டும் என பேசினாா்.

காந்தியின் அளப்பரிய தொண்டுகளை நினைவுகூா்ந்து மாணவா்கள் சிலா் தமிழ், ஆங்கில மொழியில் பேசினா். பள்ளி துணை முதல்வா் தே.சுமதி, தலைமையாசிரியா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பேசினா். மாணவா்கள் 200-க்கும் மேற்பட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com