காரைக்கால்: நிரவி பகுதி பொதுமக்களுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன் சனிக்கிழமை நிலவேம்பு குடிநீா் வழங்கினாா்.
திருமலைராயன்பட்டினம் கீதா ஆனந்தன் அறறக்கட்டளை சாா்பில், ஆண்டு தோறும் பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு கரியமாணிக்கப் பெருமாள் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது.
சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கி, டெங்கு காய்ச்சலுக்கான விழிப்புணா்வை ஏற்படுத்திப் பேசினாா்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளையைச் சோ்ந்தோா், நிரவி பகுதியை சோ்ந்த முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.