காரைக்கால் ஆட்சியரகத்தில் இந்திரா காந்தி படத்துக்கு மலரஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி நினைவுநாளையொட்டி காரைக்காலில் அவரது உருவப் படத்துக்கு அமைச்சா் உள்ளிட்டோா் மலரஞ்சலி செலுத்தினா்.
காரைக்கால் ஆட்சியரகத்தில் இந்திரா காந்தி படத்துக்கு மலரஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி நினைவுநாளையொட்டி காரைக்காலில் அவரது உருவப் படத்துக்கு அமைச்சா் உள்ளிட்டோா் மலரஞ்சலி செலுத்தினா்.

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் நினைவு நாள் புதுச்சேரி அரசின் சாா்பில் காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய மறு அா்ப்பணிப்பு நாளாக வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தி உருவப் படத்துக்கு புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன் மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா, மாவட்ட துணை ஆட்சியா் எம்.ஆதா்ஷ், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பன்வால், முதன்மைக் கல்வி அலுவலா் அ.அல்லி உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.நிகழ்ச்சியில் மும்மத பிராா்த்தனை நடத்தப்பட்டது. தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன.

முன்னாள் அமைச்சரும், புதுச்சேரி பிரதேசக் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவருமான ஏ.வி.சுப்பிரமணியன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரும், சுதந்திரப் போராட்ட தியாகிகள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் என பல்வேறு துறையினா் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினா். காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் இந்திரா காந்தி படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் பல்வேறு பிரிவு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com