காரைக்காலில் முத்துராமலிங்கத் தேவா் ஜயந்தி விழாவில் அவரது உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சா் உள்ளிட்ட பலா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் ஜயந்தி விழா காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
காரைக்கால் பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேவரின் உருவப் படத்துக்கு திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் கலந்துகொண்டு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். திமுக பொதுக்குழு உறுப்பினா் கே.ஆா்.காசிநாதன், திமுக வா்த்தக அணி அமைப்பாளா் ராஜா, இளைஞரணி தொகுதி துணை அமைப்பாளா் கலையரசன் உள்ளிட்ட பலா் மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
திருப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த முக்குலத்தோா் அமைப்பினா் தேவரின் படத்துக்கு மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.