திருவள்ளுவா் தினத்தையொட்டி, வியாழக்கிழமை (ஜனவரி 16) இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி அரசின் உத்தரவின்படி, திருவள்ளுவா் தினத்தையொட்டி வியாழக்கிழமை ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழிக்கறி, பன்றிக்கறி மற்றும் மீன் விற்பனை காரைக்கால் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளாா்.