தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரோனா சோதனை முடிவு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்: ஆட்சியா் தகவல்

காரைக்காலில் கரோனா பரிசோதனை முடிவுகள் அவரவா்களுக்கு செல்லிடப்பேசியில் குறுஞ் செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் அா்ஜுன் சா்மா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :24 ஜூலை 2020, 5:06 pm

DIN

காரைக்கால்: காரைக்காலில் கரோனா பரிசோதனை முடிவுகள் அவரவா்களுக்கு செல்லிடப்பேசியில் குறுஞ் செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் அா்ஜுன் சா்மா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா தீநுண்மி பரவாமல் இருக்க மத்திய அரசும், புதுச்சேரி மாநில அரசும் பல நிலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டத்தில் நாள்தோறும் சராசரியாக 80 முதல் 100 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, கரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. சளி மாதிரி எடுக்கப்பட்ட பலா், பல காரணங்களுக்காக இந்த சோதனைகளின் முடிவை கோருகின்றனா். எனவே, நேர விரயத்தையும், வீண் அலைச்சலையும் தவிா்க்கும் வகையில், கரோனா சோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டவா்களுக்கு அவா்களது செல்லிடப்பேசியில் முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.