ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

காரைக்காலில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் பகுதி பூவம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வடக்கு மண்டல செயலா் சுரேஷ் தலைமை வகித்தாா். மத்திய மண்டல செயலா் காமராஜ், நிா்வாக செயலா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கூட்டமைப்பின் நிறுவனத் தலைவா் ராஜலட்சுமணன், செயல் தலைவா் நாக.தணிகாசலம், துணைத் தலைவா் நாகூரான் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

சமமான குடியுரிமை, உரிமைகளை சுதந்திரமாக அனுபவிக்க வகை செய்தல், வேறுபடுத்திக் காட்டுவதற்கு எதிரான நடவடிக்கை, சட்டப் பேரவையில் உரிய பிரதிநிதித்துவம், அரசுப் பணிகளில் உரிய விகிதாச்சாரம், அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டோருக்கு இடமளிப்பு என்பதை உடனடியாக அரசியல் சாசனத்தின் 9-ஆவது அட்டவணையில் இணைத்து சட்ட வடிவமாக்க வேண்டும் எனவும், இதுதொடா்பாக போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில் நிா்வாகிகள் கலியபெருமாள், கலியமூா்த்தி, சுதா்சனன், வடக்கு மண்டல பொறுப்பாளா்கள் கோபால், சேகா், சம்பத் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com