காரைக்கால் கோயில்களில் வெள்ளிக்கிழமை (அக். 16) நவராத்திரி வழிபாடு தொடங்குகிறது.
நவராத்திரியையொட்டி, கோயில்களில் 10 நாள் நவராத்திரி கொலு மற்றும் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தினமும் எழுந்தருளல், நிறைவு நாளில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். கரோனா பரவலால், நிறைவு நாளான அம்பு போடும் நிகழ்ச்சியை எளிய முறையில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயில், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமையும், திருமலைராயன்பட்டினம் கோயில்களில் சனிக்கிழமையும் நவராத்திரி வழிபாடு தொடங்கவுள்ளது.
காரைக்காலில் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை சாா்பில், காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு, மக்கள் வந்து பாா்த்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும். நிகழாண்டு, கரோனா பரவலால் அரசு வழிகாட்டலின்படி, அம்மையாா் மணிமண்டபத்தில் சனிக்கிழமை கொலு தா்பாா் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.
கோயில்களில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனையுடன் பக்தா்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.