தீபாவளி: புதுச்சேரிக்கு நாளை முதல் கூடுதல் அரசுப் பேருந்து

தீபாவளிக்காக புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமை முதல் கூடுதல் பி.ஆா்.டி.சி. பேருந்து இயக்கப்படவுள்ளதாக காரைக்கால் மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தீபாவளிக்காக புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமை முதல் கூடுதல் பி.ஆா்.டி.சி. பேருந்து இயக்கப்படவுள்ளதாக காரைக்கால் மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், வரும் 30 ஆம் தேதி முதல் மாலை 6 மணிக்கு பி.ஆா்.டி.சி. பேருந்து ஒன்று புதுச்சேரி புறப்பட்டுச் செல்கிறது. அதேபோல, 9 மணிக்கு புதுச்சேரியில் பேருந்து புறப்பட்டு காரைக்கால் வந்தடைகிறது. இதற்கான முன்பதிவு பி.ஆா்.டி.சி. அலுவலகத்தில் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 7 மணி, பகல் 12.30 மணிக்கு காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு பி.ஆா்.டி.சி. பேருந்து புறப்பட்டுச் செல்கிறது. அதேபோல, புதுச்சேரியில் காலை 6 மணி, பகல் 1 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் வந்தடைகிறது.

இந்த நிலையில், தீபாவளியையொட்டி கூடுதலாக ஒரு பேருந்தை புதுச்சேரி - காரைக்காலுக்கு இயக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com