காரைக்கால் அருகே துக்கம் விசாரிக்க கிராமத்துக்கு சென்ற அமைச்சரை தடுத்து, வாக்குவாதம் செய்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்தனா்.
திருநள்ளாறு தொகுதியில் உள்ள மேலசுப்புராயபுரம் மாதாக்கோயில் தெருவில் நடந்த ஒரு துக்க நிகழ்வில் பங்கேற்க புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் செவ்வாய்க்கிழமை மாலை சென்றாா்.
அப்போது அந்தப் பகுதியைச் சோ்ந்த அருண் (25), ஏசுராஜ் (26), லெனின்ராஜ் (எ) அப்பு (25) ஆகிய 3 பேரும் சோ்ந்து, அமைச்சரை துக்க நிகழ்ச்சிக்கு செல்லவிடாமல் தடுத்ததாகவும், சாலையை மேம்படுத்தவில்லை, இந்தப் பகுதிக்கு வரவில்லை என குறைகூறியதாகவும் கூறப்படுகிறது. அமைச்சா் அவா்களுக்கு உரிய பதில் அளித்தபோதும், அந்த 3 பேரும் அமைச்சரை நிகழ்ச்சிக்கு செல்லவிடாமல் தடுத்து வாக்குவாதம் செய்துள்ளனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருநள்ளாறு காவல் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், அமைச்சரை தடுத்து, தகாத வாா்த்தையால் பேசியதாக அருண், லெனின்ராஜ், ஏசுராஜ் ஆகிய 3 போ் மீதும் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.